வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav
5,647,601
Published 2021-08-01
வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!
All Comments (21)
-
எல்லா பெண்களும் சுமங்கலியாக வாழ ஆசிர்வதிக்க வேண்டும் முருகா. முருகா
-
கடன் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு வேண்டும்.சொந்த வீடு வேண்டும் முருகா.
-
என் அம்மா அப்பா நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உன் பாதம் தொட்டு வணங்கு கிறேன் முருகா🙏🙏. ..
-
நிஜமா என் வாழ்வில் நடந்த அதிசயத்தை சொல்லுறேன்.. சின்ன வயசுல இருந்து எனக்கு முருகன் மேல் பக்தி கிடையாது, என் தம்பிக்கு முருகன் தான் உயிர்,கல்லூரி படிக்கும் போது எனக்கு மருத்துவ துறையில் நிறைய திருட்டு தனம் நடந்து தவறான மருந்து குடுத்து நான் செத்து பிழைச்சேன் அப்போகூட என் தம்பி முருகன கும்பிடு னு கெஞ்சினான், முடியாதுனு சொன்னேன். ஆனாலும் இப்போ எனக்கு திருச்செந்தூர் முருகனுக்கு சேவகம் பண்ணுறவர தான் கணவனா அடஞ்சிருக்கேன்.. கொஞ்சம் பிரச்சனையாகி இந்த வாழ்க்கையே வேண்டாம்னு முடிவு பண்ணி வருத்தத்துல இருக்கும் போது தான் youtube ல் "வேல் மாறல்" பத்தி நிறைய வீடியோ பார்த்து நேத்து தான் முதல்ல போட்டு கேட்டேன்.. ராத்திரி முருகன் ஏதாவது உணர்த்துறாரா னு பாப்போம்னு தான் நெனச்சேன். கனவுல 3 மயில் வந்து நின்னு ஒரு தனி தோகை வேற விரிச்சு ஆடுற காட்சியும் கிடைத்தது ✨✨ முருகன் மேல் இப்போ எனக்கு மரியாதை வந்திருச்சு ✨✨ மிக்க நன்றி முருகா ✨
-
என் மனைவியி மார்பக புற்றுநோய் குனமடை உன் அருள் வேண்டும் ஓம் முருகா அனைவரி ஆசியும் வேண்டும் ஓம் முருகா
-
என்னை போல இந்த மாதம் குழந்தை தங்கிவிட வேண்டும் என்று உன்னிடம் வேண்டுபவர்களுக்கும்....குழந்தைகாக ஏங்கி கொண்டு உன்னிடம் சரனடை பவர்களுக்கும் அருள் கொடு முருகா....
-
இந்த பதிவில் என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி போட் டு இருந்தேன்.சக்ஷ்டிஅன்று புதன் கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.வேல்மாறல் மகா மந்திரம்.முருகா.
-
இன்று பள்ளி கள் திறக்கப்படுகிறது அனைத்து குழந்தை கள் நன்றாக படிக்க வேண்டும் முருகா
-
முருகா எனக்கு எதுவுமே வேண்டாம் பா நீ மட்டும் போதும் உன் பாதத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பா கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
-
அப்பா முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நீ இட்ட பிச்சை எட்டு வருடத்திற்கு பிறகு
-
ஓம் சரவணபவ முருகா 🙏. இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா. எங்களைப் போன்று குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா...
-
முருக எனக்கு பார்வை சரியாக இருக்க அருள் புரிவாயாக நான் 70 வயது நிரம்பிய யாரும் இல்லாத நிலையில் வாழ்கிறான்
-
என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நல்லபடியாக குணமாக அனைவரும் முருகப்பெருமானை வேண்டிகொள்ளுங்கள் தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன்
-
ஓம் முருகா போற்றி போற்றி கல்யாண வயதில் இருக்கும் அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள்தருவாய் அப்பா முருகா
-
யார் யார் என்னென்ன வேண்டுதல்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரின் வேணடுதல்களையும் நிறைவேற்றி கொடுத்து அருள் செய் முருகா குமரா குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என் மகனின் வலிப்பு நோய் என் முடக்கு வாதம் என் கணவர் இடுப்பு வலி எல்லா நோயையும் பரிபூரணமாக நிரந்தரமாக குணமாக்கி விடு .இன்று வேல்மாறல் பதிகம் கேட்ட பிறகு மருத்துவமனையில் இந்த வேண்டுதலை வைக்கிறேன். நிறைவேற்று முருகா முருகா முரு கா
-
முருகா எனக்கு இந்த மாதம் கரு நிக்கனம்... நீயே என் வயிற்றில் வந்து தங்கு முருகா.. என்னைப் போல் குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் ஐயா... ஓம் சரவண பவ
-
முருகா என் பிள்ளைகளுக்கு ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒரு குறையும் இல்லாம இருக்கனும் முருகா
-
ரவுடியாக பொறுக்கி யாக திரிந்த நான்.. உன் அருளால்..நல்ல மனிதனாக வாழ்கிறேன் ..முருகா ❤❤
-
நான் வேண்டியது எதுவும் நடக்கல இருந்தாலும் என் அப்பன் முருகன் என் வாழ்வில் என்ன கஷ்டம் வந்தாலும் நான் இந்த உலகை விட்டு போகும் வரை என் அப்பனே எனக்கு 🦚🔱துணை 🙏🏻
-
8வருடம் ஆச்சு முருகா குழந்தைக்காக காத்திருக்கோம் கண் திறந்து பாரய்யாஎன் வீட்டில் தொட்டி ல் ஆடவைங்க முருகா மணி ஏந்தி நிற்கும் எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா🙏🙏🙏🙏🙏